மோர் குழம்பு
கோழிக் குழம்பு
இறால் குழம்பு
எனக்கு மட்டும்
வகைவகையான
நாமங்கள்
என்னோடு உறவாட
சோறுமட்டும் தான்
என்னை போற்றாத
விருந்தாளி இல்லை
தூற்றாத குழந்தைகளில்லை
என் வாசனைக்கு
மசாலாவும்
என் திகைப்புக்கு
புளியாரும்
என் ரசனைக்கு
உப்பாரும்
என்றென்றும் உறுதுணை
ம்ம்ம்ம் என்னை ரசம்தட்டி
திண்டு தீர்பதில்தான்
அனைவருக்கும் ஆனந்தம்
0 comments:
Post a Comment