இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, May 18, 2010

“எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்)


கையில் ஏந்திய
குழந்தையை....

தொட்டில் ஏற்றி
தாலாட்டுப்பாடி...

அக மகிழ்ந்ததில் கண்ட
ஆலாபனை நாட்கள்

என்னருமை மகளே
மனங்குளிர்த்த தளிரே
உன்னை அடைந்த ஆனந்தம்
விண்ணில் மிதந்த பெருமிதம்

உனது மூன்றாவது மாதம்
நான் பிரிந்த நிமிடம்
தீராத கண்ணீர் ஆறாய்
பெருக்கெடுத்த நாளை
நினைத்த நெஞ்சம்
கனக்கிறது மகளே...

இன்று உணர்ந்து
காணத்துடித்து.....
“எப்போது வருவாய்”
எனறு நீயும் கேட்க
துட்கித்த இதயம்
கண்ணீர் வடிக்கிறது

என்னருமை தாயே
உன் எதிர்காலம் சிறக்க
எம்மைப் பிரித்த காலனுடன்
காத்திருக்கிறேன்
பொறுத்திரு நீயும்
பொற்காலம் உருவாகும்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...