இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, May 8, 2010

கருணை வடிவே அம்மா....



ருணைவடிவே
அம்மா......... நீ
பத்து மாதம்
பொத்திக்காத்து
பெத்தெடுத்து
உன் பாசத்தை
என்மீது மழையாய்
பொழிந்தாய்

எத்துயர் வந்திடினும்
அத்தனையும் சிரம்
ஏற்ற என்தாயே
இன்றும் மழை பொழிய
என்னைக் காக்க
உன் சிரம் ஏற்றதில்
பொறாமை கொண்ட
வானமும் ஆனந்தக்
கண்ணீராய் அதிகம்தான்
வடிக்கிறது....

இப்படியும் காத்த
என் மாதாவின்
இளகிய மனதுக்கு
எப்படி நான்
நன்றி கூற
தாயே நீ...
என் பொக்கிசம்
ஆதலினால்...
இறைவா என்தாயின்
மனங்கோணா
வாழ்கையினை
அமைத்திடுவாயா!!!

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

இறைவன் உங்கள் வடிவில் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவராக...

தாய்மையை போற்றும் வரிகளாய்... வாழ்த்துகள்

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...