இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, May 11, 2010

அடிமைச்சங்கிலி (சீதனம்)

சீராய் சீதனம் பெற்று
மணாளன் என்று
நாமம் சூடிய வறியவனே
நீ கொண்ட கோலத்தில்
காணத்துடிக்கும்
இன்பங்கள் செல்லாக்காசுகள்

உண்மை மறுத்த நீ
கரும்பு தின்ன
கூலி வாங்கியவன்
மகர் என்ற புனிதத்தை
உன் உழைப்பில் வழங்காது
கொள்ளை அடித்தவன்
சில்லறை விடுவது போல்
சீதனத்தில்
நீ கொடுத்த மகர்
புரியாமல் நீ செய்யும்
மிகப்பெரிய கொடுமையடா

பெண் என்ற பெட்டகத்தை
கொள்வனவு நீ செய்தால்
பொக்கிசம் உனக்காகும்
பெண் உன்னை வாங்கியதால்
நீ பொருளானாய்

சீ என்று துப்பவும்
போ என்று விரட்டவும்
வழிசெய்தவன் நீயல்லவா?
அடிமைச்சங்கிலி
நீ அணிந்ததால்
அனுபவித்து அருமை பெற்றாய்
இச்சங்கிலி உடைப்பதற்காய்
மகனுக்கு அணிந்திடாதே....

மகர்- மணமகன் மணமகளுக்கு வழங்கும் கட்டாயக் கிரயம் (தங்கம் வெள்ளி பணம் ஏதாவது)

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...