இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, May 24, 2010

விதவை ......


மறுமணம் மறுத்து
திருமணம் நடந்ததில்
கணவனை இழந்ததால்
சமூகம் இட்டபெயர்

இறைவனின் ஏற்பாட்டில்
நடந்த இன்நிகழ்வை
ஏற்க மறுக்கும் மனிதம்
நையப் புடைக்கும் வார்த்தையிது

பெண் என்ற பூவையரின்
எதிர்பாரா விபத்தில்
வடுவாய் மாறும்
அழியாக் கீறலிது

இளமை தனக்கிருந்தும்
விதவையானவளை
எள்ளி நகையாடாது
இனியவாழ்வளித்தல்
இளமையரின் பொறுப்பன்றோ..

உணர்வுக்கு மதிப்பளித்து
உயரிய வாழ்கையினை
உயிராய் மதித்து நீயும்
விதவை என்ற பெயரை
வேரோடு அழித்துடு தோழா..

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...