இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, May 22, 2010

வெயில்..




















சூரியன் என்ற ஆதவனே
சூடு என்ற உன்
சுட்டெரிக்கும் முகத்தில்
சினம்தான் எத்தனை
சிற்றின்பமும்
சீர்குலைக்கும் வண்ணம்
சிறு எறும்பும் நடுநடுங்கும் நிலைக்கு
சீறும் உன் நிலை காண
வற்றாத நீரும் வற்றுகிறது

உனை காண மறுத்து
நாள்முழுதும் குளிர்ச்சியறையில்
பதுங்கியிருந்தும்
நிர்பந்த ஒரு நொடியில்
நிலை குலையச்செய்கிறாய்

வெட்ட வெளி வேலையாளி
வெந்து நொந்து
நிழலெதுவும் கிடைக்காதா
நிம்மதியும் கிடைக்காதா
எண்றெண்ணி....
உனை நோகும்
நிலை
ஏன் உனக்கு புரியவில்லை


உலக பயன் உன்னால்
பல இருந்தும்
சுடு வெயில் என்ற
ஒரு செயலில்
முகம் சுளிக்கச்செய்கிறாயே
சினம் குறைந்த வெயில் தந்து
மனங்குளிரச்செய்வாயோ..

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

sakeeb1 said...

உண்மைச் சம்பவம்
தற்போது கட்டாரில்

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...