இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, May 16, 2010

காதல் பிதற்றல்

கலியுகக் கண்ணா
என் காதல் மன்னா
என் மடி நீ தவள
நித்தமும் நித்திரை மறந்தாய்
நினைத்துப்பார்கிறேன்
நித்திரை மறக்கிறேன்

காதல் மொழி பேசி
கண்ணே என்று நாடி தொட்டு
கன்னம் சிவக்க காதல் முத்தம்
தந்தவன் நீ

வருடிய கூந்தலை
விரல்களால் வகுடெடுத்து
வாரிக்கொடுத்தவன் நீ

திடீர் முத்தம் இடியாய் தந்து
இதழ்கள் சிவக்க
இச்சையாக்கியவன் நீ

அருகில் அமரந்து
உஷ்னம் மூச்சாகி
உரக்க மொழியாமல்
உரம் கொடுத்தவன் நீ

அடைந்த வலிகளை
மென்மையாக்கி
கட்டில் சுகத்திற்காய்
முடிச்சு இட்டவன் நீ

சுகத்துக்கே
சுகம் கொடுத்த
சுந்தரப்புரிசனும் நீ

உன் காதல் லீலைகளை
நீ பிதற்றிய நிமிடங்களை
பித்துப்பிடித்தது போல்
பிரிந்த வினாடிகளில்
நினைத்துப்பார்த்து
நிம்மதி கொள்கிறேன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...