இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, April 25, 2010

(காதல்) காவியம் படைப்போம்


மாந்தர்களில் சிறந்தவளே
மாதுகளில் உத்தமியே
நீ என் மீது கொண்ட காதலை
என்னவென்று சொல்வேனடி

என்தவறுகள் தெரிந்தும்
ஏன் இத்தனை மோகமடி
காதலர்களின் சரித்திரத்தில்
உன் காதல் இமயமடி

நான் என்ன செய்தேன் உனக்கு
என்னில் உன்னை கவர்ந்தது எது
அன்பு எனும் பரிமாணம்
எம்மை கிறங்கச் செய்கிறதோ

கண்மணி நீ உன்பாசத்தால்
கட்டிவிட்டாய் என்னை
நீ வேண்டும் எனக்கு
என் வாழ்நாள் முழுதும்

உன் சல்லாப தரிசனத்தில்
நாம் உயிர்வாழ வேண்டும்
காதலின் தெய்வீகத்தை
உலகுக்கு பறைசாற்ற வேண்டும்

உலகின் உன்னத காதலர்கள்
நாமாக வேண்டும்
காதலை கொச்சைப்படுத்தும்
கயவர்கள் வெருண்டோட வேண்டும்

புதிய காவியம் எம்மால்
உருவாக வேண்டும்
சரித்திரத்தில் நாமும்
கிளையாக வேண்டும்
இத்தனைக்கும் நாம்
ஒன்று சேர வேண்டும்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

Unknown said...

so nice ur poem i really like to read ur all poem

சிந்தையின் சிதறல்கள் said...

thanks my dear

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...