இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, April 28, 2010

கற்ற பாடம்.......


பரீட்சையறையில்
பாடங்களின் பரீட்சை
ஒன்றொன்றாய் ஆறும்
எழுதிவிட்டு ஒன்பதாவது
பாடம் காதல் உருவெடுக்க
எட்டாவது பாடத்தில்
ஒன்பதாவது பரிட்சையும்
எழுதிவிட்டேன்......

அவளின் பச்சைக்கொடி
ஏந்திக்கொண்டு
யாருமறியா வேளையில்
பதுங்கி நடுங்கி
சந்தித்து மகிழ்ந்திருந்தேன்

காலனின் கனிவில்
எம் காதலும் கனிந்திருக்க
விதி செய்த மாயம்
அவளுக்கென்று...
வீட்டாரும் துணைதேட
காதலை மறைத்த
அவள் செயலால்
துடியாய் துடித்தேன்
தவியாய் தவித்தேன்
அந்த நிமிடம்....

பரிட்சைக்குச் சென்றனான்
பாடங்களை கற்காது
காதல் பாடம் கற்றதினாலோ
பாதியில் அவளும்
விட்டுவிட்டாள்....
சிறந்த பாடம் சிறப்பாய்
எழுதியிருந்தால்
இன்று நானும்
பட்டதாரியாகிருப்பேன்
இன்று நான் கற்ற பாடம்
அன்று நான் கற்றிருந்தால்
என்வாழ்வும் சிறந்திருக்கும்

பின் குறிப்பு : இக்கவிதையின் கருவானது எமது உறவுகளில் ஒருவர் கண்டிப்பாக யாரென்று கேட்க வேண்டாம் (கதை கேட்டேன் தைத்தது மனதை)

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...