இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, April 25, 2010

ஒன்றுபட்டுப்பார்


மனிதா
காக்கை தன் இனத்துக்காக
கொள்ளும் வேட்கையை
சற்று கவனித்துப்பார்

எறும்புகளின் கூட்டங்களைப் பார்
கறையான்களின் வாழ்வுதனை
எண்ணிப்பார் இவைகளில்
எமக்குண்டு படிப்பினை
புத்தி எனும் ஆறாவது
அறிவுடன் பிறந்த
நீ மட்டும் எதிர் மறையாய்
வாழ்வதேன்

உன்னோடு பிறந்தவனுக்கு
எதிரியாய் நீ
உன்னை பெற்றவளுக்கு
பாவியாய் நீ
உன்னோடு பழகியவனுக்கு
துரொகியாய் நீ
உன்னோடு வாழ்தவனுக்கு
கயவனாய் நீ
ஏமாற்றுவதில் சிறந்தவன் நீ
காட்டிக் கொடுப்பதில்
வல்லவன் நீ
இவைகளால் நீ
ஆடைந்ததுதான் எது?

மாறாக இவைகள் கழைந்து
ஒற்றுமைப்பட்டுப்பார்
உன் வாழ்வின் சிறப்பை
உன்னோடுதான் உன் உறவுகள்
உன்னோடுதான் உன் தோழன்
உன்னோடுதான் உன் சமூகம்
ஏன் நீ ஒன்றுபட்டால்
உலகையே ஆட்டிவைக்கலாமே
ஆட்சி கொள்ளலாமே
சிந்திப்பதில்லையா? நீ …..


உன் போன்ற மாற்றான்
உன் ஒற்றுமை கழைந்து
வேற்றுமை வளர்;த்து
உன்னை வைத்து
அவன் வாழ்கிறான்
அவனோடு கைலாகுக்கு முன்
சற்று கவனித்துப்பார்
உன்னை மாற்றிய
அவனை வெல்வதற்காய்…

ஒற்றுமை வேண்டும்
அனைத்திலும் எமக்கு
குடும்ப வாழ்விலும்
உறவுகளின் பிணைப்பிலும்
சமூக மேம்பாட்டிலும்
சூழல் சமத்துவத்திலும்
ஒன்றுபட்டுப்பார்
நாளை உன் கையில்.
நின்று நிதானித்து
எழுந்துபார் மலரும் நாள்
சிறப்பாக அமையும்..

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

Unknown said...

super haseem arumayna varikal valthukkal

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...