இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, April 24, 2010

நட்பின் உத்வேகம்


வசந்தங்கள் நிறைந்த
பூங்காவனம் நீ
வாசங்கள் நிறைந்த
றோஜாவும் நீ
உன் பாசமெனும்
வாசனையால் எனைமறந்து
தவிக்கிறேன்

நீ மட்டும் ஏன்
உன் தூய நட்பால்
எனைக்கவர்ந்து
இவ்வுலகை மெய்
மறக்கச்செய்கிறாய்

நீதான் நட்பின்
திருவுருவமோ
ஏன் உன் பாச
விம்பத்தால்
எனைக்கொல்கிறாய்

நீதான் நட்பின் ஆழ்கடல்
ஆதலால் உன்னுள்
நீந்தி அன்பு எனும்
முத்தெடுத்து
தவியாய் தவிக்கிறேன்

உன் பாச வலையில்
கட்டுண்டதால்
இப் பூவுலகை
துறந்தாலும்
என்றும் உனையகலேன்
இது தான் எம் நட்பின்
உத்வேகமோ.....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...