இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, April 24, 2010

பட்டமரம்


மொட்டும் மலருமாய்
பிஞ்சும் காயுமாய்
தளிரும் இலையுமாய்
பசுமையுடன் செழுமையாய்
வாழ்ந்த என்னோடு
எத்தனை உறவுகள்

நான் முதன் முதலாய்
மொட்டு மலர்ந்த போது
உறவுகளின் ஆரவாரத்தில்
பட்டாசு வெடிகள்
நான் பிரசவித்த கனிகளை
மென்றவர்கள் பல நூறு

என் கழுத்தில் ஊஞ்சல் கட்டி
ஆடி மகிழ்ந்தவர்களும்
என் நிழலில் மண்சோறு சமைத்து
உண்டு மகிழ்ந்தவர்களுமாய்
என்றென்றும் உறவுகள்

கால ஓட்டத்தில் இன்று
நான் மட்டும் அனாதரவாய்
எனது புதிய பெயர் பட்ட மரம்
ஆனாலும் விறகு வெட்டிக்கு
விற்றதால் எனது
அங்கங்கள் தீக்கிரையாகின்றன
பட்டமரமானாலும்
இறுதி மூச்சுவரை நானும்
பயநாளிதான்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...