இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, April 24, 2010

கனவுலகில் நீ


பேரழகிகளின் ராணி
உன் அன்ன நடை கண்டு
உன்
வண்ண இடை கண்டு
கார் குழலின் நீளம் கண்டு
சாந்த நிலா முகம் கண்டு
உன்னில் மையம் கொண்டு
எம் உலகில் நாம் மட்டும்

காதலும் காமமாய்
தேனமுத மொழிபேசி
கொஞ்சல் சினுங்கல்
என்றும் குதூகலம்
வண்ண வண்ண
பட்டாம் பூச்சிகளாய்
சிறகடிக்கும் சிட்டுகளாய் நாம்

நிலைத்த உலகம்
என்றெண்ணி என்னை
நான் மறந்து......
உன்பின்னே ஓடோடி
கட்டிலை விட்டுருண்டோடி
தரைதொட்டு தலைகுனிந்து
கனவுலகில் நீ -
விளையாடிய நாளது
நிலையற்ற உலகதில்
உன்னோடு வாழ்ந்த
உணர்விது..........

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...