இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, April 25, 2010

காதல் தோல்வி



என்னுயிர் காதலியே
நீ……..
அள்ளித்தந்த காதலமுதை
பருகி முடிப்பதற்குள்
தட்டிவிட்டாய் கொட்டிவிட்டேன்

கண்ணா என்றாய்
காதலே என்றாய்
அன்பே என்றாய்
உயிரே என்றாய்
உன்வார்தையில் செருகியதால்
நான் செக்கி நின்றேனன்று
ஆனால்..

இன்று நீ சொன்ன வார்த்தையில்
நொறுங்கிப்போனேன்
சுக்கு நூறாய்…
காதலிக்கும் போது…
நீதான் நான் என்றாய்
திருமணத்துக்காய்
தடை பெற்றோர் என்கிறாய்
நான் காதலித்தது
உன்னை மட்டும்தான்..

குறுகிய காலம்
முறுகிய காதல்
பகிர்ந்த உணர்வு
லயித்த நொடிகள்
அத்தனையும்….
ஆதவனைக்கண்ட பனிகளாய்
இரவைக்கண்ட பகலாய்
மரணம் ருசித்த ஜடமாய்
மாற்றியது நீதான்..

நடக்கிறேன்
தடுமாறுகிறது கால்கள்..
நிற்கிறேன் சுற்றுகிறது தலை
உட்கார்கிறேன்
வெறுக்கிறது தேகம்..
துயில் கொள்கிறேன்
மறுக்கிறது கண்கள்
வெறுக்கிறேன் உலகையே
உன்னால்தான்..

நீ தந்க காதலை
நீயே பறித்து விட்டாய்
இன்று நான் நடைப்பிணம்
ஆக்கியது நீ
நீயாவது நன்றாய் வாழ
உனக்காக வேண்டுகிறேன்
இறைவனை
வாழ்க வளமுடன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...