இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, April 24, 2010

துணைவியின் பிரிவில்

இப் பூவுலகில்
எனக்காக பிறந்தவளே
என் மடியில் தவழ்ந்து
என்னோடு கலந்தவளே
என்னையே சுவாசித்து
எனக்காக வாழ்ந்தவளே
உனைப் பிரிந்ததால்
இன்று நானும்
உணர்வற்ற ஜடமானேன்
உயிரற்ற உடலானேன்

பசுமையற்ற பட்ட
மரமானேன்…..
ஏன் இந்த கோலமடி?
நீ கொடுத்த முத்தங்களும்
நீ கோதிவிட்ட முடியும்
நீ ஊட்டி விட்ட உணவும்
நீ கொட்டித்தீர்த்த பாசமும்
நீ என்னோடு கலந்த நாட்களும்
நீ என்னை ஆக்கிரமித்த வினாடிகளும்
என் கண்முன்னே
நிதமும் காட்சியடி

ஆதலால்
தவிக்கிறேன் என் உயிரே
துடிக்கிறேன் உனை நினைத்து
என் நாடி நரம்புகளில்
உன் நினைவுகள்தான்
உதிரமாய்.. அதனாலும்..
நீதான்; நான்.
உன் காதலை ரசித்ததால்
உன்னை நான் மென்று
ருசித்ததால்
உன் தித்திப்பில்
உலகமே கசக்குதடி..

நீ என்மீது கொண்ட
காதலுக்கு நிகரேதடி
காவியங்கள் கூட
உன் காதலுக்கு
உன்னிடத்தில் அடிமையடி
இவ்வுலகின்
என் தேவதையே
ஒவ்வெரு நொடியும்
கடிகாரம் பார்க்கிறேன்
காலத்தை நொந்துகொள்கிறேன்
காகிதங்களை நேசிக்கிறேன்
ஏன் இவ்வுலகையே
வெறுக்கிறேன்
யாவும் உன்னால் தானோ
நீ இன்றியதால்தானோ
பொறுத்திரு என் சுவாசமே
பிரிவுக்கு விடைகொடும்
காலம் எம்மை
கூடி வரும்
அதை நினைத்து நானும்
சாந்தம் கொள்கிறேன்
எமக்காக....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...