இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, April 24, 2010

சோக உள்ளம்


ஒவ்வொரு நொடியும்
உனைத்தேடி நான்
காத்திருக்கும் நிமிடங்களில்
தவிக்கும் உள்ளத்தை
நினைக்க முடிகிறதா உன்னால்

உன்னை கண்டவுடன்
என்உயிர் திரும்பியதாய்
சிட்டாய் சிறகடிக்கும்
என் உள்ளத்தை
சிந்தை செய்யாத நீ

தவித்த என் மனதை
வாஞ்சைகள் செய்து
வாரி அணைப்பாய்
என்றிருந்தேன் மீண்டும்
தவிக்க விட்டதால்
உள்ளத்தின் சோகம்
உள்ள படி உள்ளதே

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...