இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, April 24, 2010

பரிதாபம் மாறும்


கடந்த நிகழ்வில்
மடிந்துவிட்ட புனிதர்களின்
சடலங்களில்…
மானிடம் எனும் ஜீவராசிகள்
குதூகலிக்கின்றன…

ஏய்….
இறந்தவனும் மனிதன்தான்
உன்போன்று உணர்வுள்ளவன்
அவன் மறைந்து உயர்ந்துவிட்டான்
நீ இருந்து தாழ்ந்து விட்டாய்
இதன் வடுக்களாய்
பல்லாயிரம் பேரின்
பரிதாபம் காண
பதறுகிறது உள்ளம்

அந்தோ….
மனிதத்தின் அவலங்கள்
உறவுகள் இழந்து
உடன் பிறப்பும் இழந்து
மனையிழந்து
செல்வமிழந்து
உண்ண உணவிழந்து
உடுக்க உடையிழந்து
தூக்கம் மறந்து
சந்தோசம் மறந்து
பாசம் மறந்து
பரிவு மறந்து
பரிதவிக்கிறான்..

நாதியற்ற உலகமிது
திரும்பிப் பார்க்க
யாருமில்லை…
சுய நலத்துக்காக சிலர்
வார்த்தைகளில் பூர்த்தி
செய்கின்றனர்
ஒன்று மட்டும் நிச்சயம்
மறந்து விடாதே…

கடவுளின் படைப்பில்
சுகமும் துக்கமும்
ஒரு சுழற்சிதான்
இன்று நீ துக்கித்ததனால்
நாளை நீ நலம் பெறுவாய்.
பொறுத்திரு காலம் பதில் செல்லும்
கடவுள் என்றும் துணை.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...