இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, April 24, 2010

மீண்டும் ஒரு கொலைகாரன்


பெரும் சீற்றத்தில்
எஞ்சிய எங்களை
கொண்று விட்டாயே
மனமிருக்கிறதா உனக்கு
நீ வருமுன் கிடைத்த
உணவுகளும் அற்று
வெறும் வயிற்றுடன்
தண்ணீர் மாத்திரம் உணவு
பட்ட காயங்களை
போக்கிய மருந்துகள் அற்று
பழக்கப்படுத்திய வலிகளின்
உணர்வுகள்
தேடலுக்கு வழியற்று
முடக்கிய முள்வேலிகள்
ஓநாய்களின் வெறியால்
பறிக்கப்பட்ட சுதந்திரம்
தேர்தல் என்று நீ வந்து
மீண்டும் கொண்று சென்றாய்
இன்று நீ கொண்டதை விட
அன்று விழுந்த செல்லில்
மடிந்திருந்தால் சாந்தி
பெற்றிருப்பேனோ.....
ஒரு உன்மை தெரியுமா
யாருக்கும் வாக்கே அழிக்காத
அப்பாவி நான்....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...