இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, April 24, 2010

மாலைச்சூரியன்



விழித்திருந்து களைத்ததால்
உனக்கும் ஓய்வு தேவை
ஓய்வை உலகுக்கு
கற்றுத்தந்தவன் நீ
உன் விழிப்பில்
உலகமே உயிர் வாழ்கிறது
ஏன்…
உன் குறைவில்லா
சக்தியால் சந்திரன் கூட
உயிர்த்தெழுகிறான்
நீ விழித்தாலும்
உன் துயில்கொள்ளும்
நேரமல்லவா ஆனந்தம்
ஏன் தெரியுமா?
சுட்டெரித்த நீ
உன் சாந்த முகம்
காட்டுவதால்
உன்னில் பிடித்தது
உன் அந்தி முகம்தான்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...