இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, April 25, 2010

கனவில் நீ


தேவலோக கண்ணகியவள்
என்னை ஆட்கொண்டவள்
என் காதலியவள்
எதிர்கால துணைவி
இருவரும் அருகருகே
கடற்கரை மணலில்
இதமான தென்றலுடன்
அமர்ந்திருக்கிறோம்..

எதிர்கால கனவுகளை
அசைபோடுகிறோம்
சிக்கனமான திருமணம்
ஆசைக்காய் இரு குழந்தை
எமக்காய் அழகிய மனை
எம்மோடு எம் பெற்றோர்
இவ்வாறு வாழ்ந்தால்
தித்திக்கும் எமது வாழ்வு

இன்நிலை கிடைக்க
என் கண்மணி
வேண்டுகிறாள் கடவுளை
பூரிப்பில் நான்
நேரம் கழிகிறது

இறுகிய உணர்வுகளில்
காதலின் உச்சம்
கன்னியவளின்…
கொவ்வை இதளை
பதம்பார்க நாடுகிறேன்
சடாரென்று வீழ்ந்ததால்
கலைந்தது சொப்பனம்
கிடந்தது தரையில்
கண்டது கனவு…

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

Unknown said...

super maa

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...